தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் – முதல்வர் முக்கிய முடிவு!

0
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் - முதல்வர் முக்கிய முடிவு!
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் - முதல்வர் முக்கிய முடிவு!
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் – முதல்வர் முக்கிய முடிவு!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகளை தடுக்கும் விதமாக முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டுமாக கொரோனா புதிய பாதிப்புகள் 100க்கும் மேல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த ஜனவரி மாதம் உருவான கொரோனா 3ம் அலைக்கு பிறகு பிப்ரவரி முதல் மக்கள் தங்கள் வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் இப்போது 4ம் அலைத்தொற்று, பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கி இருக்கிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பாதிப்புகள் இரட்டை இலக்கங்களை தொட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

WhatsApp பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி ஒரு குரூப்பில் 512 பேர் வரை சேரலாம்!

இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன்.11) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் வைத்து இன்று காலை 10 மணியளவில் துவங்கிய இந்த கூட்டத்தில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

Exams Daily Mobile App Download

இப்போது, தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இதுவரைக்கும் குறைவாகவே காணப்பட்டாலும், சிகிச்சைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளின் உதவியுடன் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர தடுப்பூசி செலுத்துவதில் இருக்கும் நன்மைகளை விளக்கி மக்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அலுவலகங்கள், திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றுவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!