தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – புதிய கட்டுபாடுகள் அமல்! நிபுணர்கள் அறிவுரை!

0
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - புதிய கட்டுபாடுகள் அமல்! நிபுணர்கள் அறிவுரை!
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - புதிய கட்டுபாடுகள் அமல்! நிபுணர்கள் அறிவுரை!தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - புதிய கட்டுபாடுகள் அமல்! நிபுணர்கள் அறிவுரை!
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – புதிய கட்டுபாடுகள் அமல்! நிபுணர்கள் அறிவுரை!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் அமலாக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தவிர்க்க மருத்துவ நிபுணர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தொற்று அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நான்காம் அலை கொரோனா பரவல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக இன்னும் தடுப்பூசி செலுத்தி செலுத்தாதவர்கள் விரைந்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2 டோஸ் தடுப்பூசிகளை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தை பொறுத்தவரை ஓரளவு மக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். அதனால் தான் தற்போது பாதிப்பின் வீரியம் சற்று குறைவாக இருக்கிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு – உச்சநீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு!

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும் போது தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் சரியாக கடைபிடித்தாலே போதுமானது. முழு ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகளை தவிர்க்கலாம் என்கின்றனர். மேலும் அரசு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் சிலர் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு தேவை என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!