தமிழகத்தில் 23% பேருக்கு கொரோனா தொற்று – சர்வே அறிக்கை!!
தமிழகத்தில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் ஏற்பட்ட பாதிப்பின் செரோ சர்வே குறித்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தில் 23% பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் முன்பு கொரோனா குறித்த செரோ சர்வே மேற்கொள்ளப்பட்டது. அந்த சர்வேயின் முடிவில் தமிழகத்தில் 23% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாத காலகட்டத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குநகரத்தின் கீழ் எடுக்கப்பட்ட சர்வேயில் பாதிப்பு 31.6% ஆக இருந்தது. தற்போது இதனை ஒப்பிடுகையில் தற்போது சராசரி ஆண்டிபாடி குறைவாக காணப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து இரண்டாவது கணக்கெடுப்பில் சென்னையை தவிர்த்து மற்ற 45 பிரிவு சுகாதார மாவட்டங்களில் மொத்தம் 22,817 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக பூந்தமல்லி (50.6%) மற்றும் குறைந்தபட்சமாக நாகை (8..9%) பதிவு செய்யப்பட்டது. முதல் செரோ கணக்கெடுப்பில் கொரோனா பாசிட்டிவ் 18.4% ஆகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட இரண்டாம் கணக்கெடுப்பில் பாதிப்பு 30% ஆகவும் காணப்பட்டது.
CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் – 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!
கொரோனாவின் இரண்டாம் அலையில் தற்போது கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இரண்டாம் செரோ கணக்கெடுப்பில் பாதிப்பு விகிதம் கோவையில் 20.5% ஆகவும், திருப்பூரில் 23% ஆகவும் மற்றும் ஈரோடு பகுதியில் 17.2% ஆகவும் காணப்பட்டது. இந்த பகுதிகளில் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தாததே பாதிப்பு அதிகரிப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே ஆண்டிபாடிகளை அதிகரித்து பாதிப்புகளை குறைப்பதற்கு தடுப்புசிகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.