CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் – 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் கணக்கீடு செய்வது என்பது குறித்து ,மத்திய அரசுடன் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் கணக்கீடு செய்ய உள்ளது என்பது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மளிகைப் பொருட்கள் உட்பட 5 புதிய திட்டங்கள் – முதல்வர் துவக்கி வைப்பு!!
இந்த பேரிடர் காலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது மாணவர்கள் உடல்நிலை மற்றும் மனநிலை தான் முக்கியமானது. மத்திய அரசின் இந்த முடிவு மாநில அரசுகளின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டிற்கு வழிகாட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.