சென்னையில் கொரோனா பாதிப்பு 5%க்கு கீழ் குறைவு – மாநகராட்சி பெருமிதம்!!
சென்னையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த சூழலில் 75 நாட்களுக்கு பின்பு மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
சென்னை கொரோனா பரவல்:
சென்னையில் சுமார் மூன்று மாத காலமாக கொரோனா நோய்பரவல் இரண்டாம் அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் சென்னை மாநகரத்தில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 700 முதல் 900 பேர் வரை தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இறைச்சி கடைகளை மூட உத்தரவு – ஊரடங்கு விதிமீறல் நடவடிக்கை!
இதனால் கொரோனா பாதிப்பு சதவிகிதமும் 20 சதவிகிதமாக அதிகரித்தது. மேலும் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்ட தொடங்கியது. இதை அடுத்து சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, பரிசோதனை மையங்களை அதிகரித்தது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை அன்று சென்னையில் 32,168 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் சென்னை மாநகராட்சி சார்பில் 25,492 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. தற்போது இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி கூறியதாவது, சென்னையில் கொரோனா பாதிப்பை குறைப்பதற்கு காய்ச்சல் கணக்கெடுப்பிற்கு வீடு வீடாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகள், ஸ்கின் சென்டர் போன்றவற்றை கண்காணிப்பது போன்ற பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் தனியார் ஆய்வகங்கள் மக்களுக்கு முந்தைய இரவில் எடுக்கப்படும் சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் ஏற்பட்டால் அதனை உடனடியாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். மறுநாள் காலை மாநகராட்சி ஊழியர்கள் நோயாளிகள் வீட்டு வாசலில் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் சுமார் 75 நாட்களுக்கு பின்பு 5 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.