இறைச்சி கடைகளை மூட உத்தரவு – ஊரடங்கு விதிமீறல் நடவடிக்கை!

0
இறைச்சி கடைகளை மூட உத்தரவு - ஊரடங்கு விதிமீறல் நடவடிக்கை!
இறைச்சி கடைகளை மூட உத்தரவு - ஊரடங்கு விதிமீறல் நடவடிக்கை!
இறைச்சி கடைகளை மூட உத்தரவு – ஊரடங்கு விதிமீறல் நடவடிக்கை!

திருப்பூர் மாநகராட்சியில் அனுமதி இன்றி ஊரடங்கின் போதும் செயல்பட்ட 26 இறைச்சி கடைகள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடைகளை மூட உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மே 24 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் முறைகேடாக இறைச்சி கடைகள் செயல்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 16 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமாக 368 இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதில் 26 கடைகள் மட்டும் அரசு அனுமதி இல்லாமல் ஊரடங்கின் போது செயல்பட்டன.

TN Job “FB  Group” Join Now

எனவே அந்த கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவில் குறிப்பிட்டுள்ள 26 கடைகள் மட்டுமல்லாமல், திருப்பூர் மாநகராட்சி முழுவதும் அனுமதியின்றி செயல்பட்ட அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு குறித்து திருப்பூர் மாநகராட்சி, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!