கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை – முதல்வர் அறிவிப்பு!!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பேரலை காரணமாக உயிரிழந்த அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
அரசு வேலை:
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். மாநிலங்கள் தோறும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும், நோய் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக மக்களை காக்கும் பணியில் நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு உதவித்தொகைகளை அறிவித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ-பதிவு முறையில் புதிய மாற்றங்கள் – அரசு விளக்கம்!!
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ள அரசுத்துறை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறும் போது, ‘கொரோனாவால் உயிரிழந்த அரசு பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு முதல்வரின் தலைமையின் கீழ், கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.