தமிழகத்தில் இ-பதிவு முறையில் புதிய மாற்றங்கள் – அரசு விளக்கம்!!
தமிழக அரசு பொதுமக்களின் தவிர்க்க முடியாத பயணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறையை கொண்டு வந்தது. தற்போது இம்முறையில் சில மாற்றங்களை செய்துள்ள நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு விளக்கம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10 முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமை தளர்வுகள் இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் பாரத் நெட் மூலம் இணைப்பு – மத்திய அரசு தகவல்!!
இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, உதாரணமாக திருமணம், உறவினர் இறப்பு, வேலைவாய்ப்பு, நேர்காணல் போன்றவைகளுக்காக மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்தாமல் அதிக அளவில் வெளியில் சுற்றுவதை கவனித்த அரசு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியது. இதனால் மே 17ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ- பதிவு தேவை என்று உத்தரவிட்டது.
TN Job “FB Group” Join Now
இ- பதிவு முறையில் தமிழக அரசு தற்போது மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதில் இருந்த திருமணம் என்ற பிரிவை நீக்கியுள்ளது. தற்போது மருத்துவம் மற்றும் இறப்பு போன்ற காரணங்கள் மட்டுமே உள்ளது. திருமணம் என்ற பிரிவில் பலர் விண்ணப்பித்து தவறாக பயன்படுத்துவதால் அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
“திருமணம் என்ற பிரிவில் பலர் விண்ணப்பித்து தவறாக பயன்படுத்துவதால் அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.”
Genuine cases will be affected.