தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – வாகனங்கள் பறிமுதல்! போலீசார் நடவடிக்கை!

0
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் - வாகனங்கள் பறிமுதல்! போலீசார் நடவடிக்கை!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் - வாகனங்கள் பறிமுதல்! போலீசார் நடவடிக்கை!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – வாகனங்கள் பறிமுதல்! போலீசார் நடவடிக்கை!

தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாத நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் மாநிலம் முழுவதும் முதல்வர் அவர்கள் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தார். இதன் காரணமாக அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் திறக்க அரசு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் ஊரடங்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தியத்தின் விளைவாக கொரோனா தொற்று குறைந்தது. இதனால் அரசு கடந்த ஜூன் 14 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது.

ஓய்வூதியர்களின் கவனத்திற்கு – SBI வழங்கும் புதிய வசதி! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.25,000 கல்வி உதவித்தொகை வழங்கல்!

இந்த நிலையில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாத 967 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் கொரோனா வேகமாக பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!