தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.25,000 கல்வி உதவித்தொகை வழங்கல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு இந்த ஊக்கத்தொகை வழங்குதல் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி ஊக்கத்தொகை:
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு அரசுப் பணிக்கும் கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு பின்னர் பணி நியமனம் செய்யப்படுகிறது. அவ்வாறு பணி நியமனம் செய்யப்படும் அரசுப் பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைக் காட்டிலும் அதிக கல்வி தகுதி பெறுவதற்கு அவர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையானது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் படித்தால் மட்டுமே அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.
பல்கலைக்கழகங்களில் சாதி, மத, இன நிகழ்ச்சிகளுக்குக்கு தடை – தமிழக அரசு அறிவுறுத்தல்!
ஒருவேளை அரசால் அங்கீகரிக்கப்படாத கல்லூரிகளில் பயின்றது உண்மைத் தன்மையில் கண்டறியப்பட்டால் அந்த கூடுதல் கல்விக்கு வழங்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகை மீண்டும் அந்த அரசு ஊழியரிடம் மீண்டும் வசூலிக்கப்படும். அதனை செலுத்த தவறினால் மாதந்தோறும் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இத்தகைய கல்வி ஊக்கத்தொகை இது வரையில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இந்த ஊக்கத்தொகை வழங்குதல் நிறுத்தப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு! DA அதிகரிப்பு எதிரொலி!
அதனை தொடர்ந்து தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத் தொகையானது மீண்டும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் முனைவர் பட்டம் (Ph.D) பயிலும் பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.