ஊரடங்கு கட்டுப்பாடு முழுவதும் நீக்கம் – அதிரடி அறிவிப்பு!
கொரோனா பரவும் விகிதம் குறைந்து வருவதன் காரணமாக ஜப்பானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீக்கம்:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து கொரோனா உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததன் காரணமாக நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்தது. அதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தாக்கத்தின் அளவை கொண்டு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என பிரிக்கப்பட்டது.
வேலூர், திருப்பத்தூர் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதனை தொடர்ந்து தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் தீவிரமாக்கப்பட்டது. தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. தற்போது ஜப்பானில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
நாடு முழுவதும் நாள்தோறும் 25,000 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதியாகி வந்த நிலையில் தடுப்பூசி பணிகள் தீவிரமடைந்தது. தற்போது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2000 ஆக குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் எனவும் படிப்படியாக கட்டுப்பாடுகளை நீக்கலாம் என வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனைகளை ஜப்பான் அரசு பரிசீலித்து வருகிறது.