தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மாணவர்களின் மனநிலையை அறிந்த பின்னரே தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
தேர்வு:
கொரோனா தீவிரத்தை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தாலும் கொரோனா தாக்கம் குறைந்ததால் காரணமாகவும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, HRA கணக்கீடு – 7வது ஊதியக்குழு விளக்கம்!
செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தாக்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. மாணவர்களுக்கு கொரோனா தாக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பள்ளிகளில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மதுபான விற்பனைக்கு தடை – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!
அதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். எனவே நவம்பர் 1ம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாணவர்களின் மனநிலையை அறிந்து பின்னர் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.