ரத்து செய்யப்பட்ட ஊரடங்கு – வழக்கம் போல் இயங்கும் இரு மாநில பேருந்து சேவை!

0
ரத்து செய்யப்பட்ட ஊரடங்கு - வழக்கம் போல் இயங்கும் இரு மாநில பேருந்து சேவை!
ரத்து செய்யப்பட்ட ஊரடங்கு - வழக்கம் போல் இயங்கும் இரு மாநில பேருந்து சேவை!
ரத்து செய்யப்பட்ட ஊரடங்கு – வழக்கம் போல் இயங்கும் இரு மாநில பேருந்து சேவை!

கொரோனா பாதிப்பால், கேரளா மாநிலம் முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கேரளா – தமிழகம் இடையிலான அரசுப் பேருந்து சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.

ரத்து செய்யப்பட்ட ஊரடங்கு:

இந்தியா முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா தொற்று, இதன் தொடர்ந்து ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கின. இந்த நிலையில் கொரோனா 3 வது அலை அனைத்து மாநிலங்களிலும் பரவத் தொடங்கியது. இந்த வகையில் தொற்று பாதித்த மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இந்த வகையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகள்!

கேரளா மாநிலத்தில் தினசரி பாதிப்பு உச்சத்தை தொட்டதால், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மாநிலம் முழுவதும் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த 6 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, கடந்த நான்கு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குகள் அமலில் இருந்தது. இருப்பினும் சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்து முதல்வர் உத்தரவு அளித்தார்.

தமிழகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை – பிப்.22 கடைசி நாள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்த உத்தரவு அடிப்படையில் தமிழக அரசு பேருந்துகள் தமிழக- கேரள மாநில எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தமிழக அரசு பேருந்துகள் கேரள மாநிலத்திற்கு சென்று வந்தது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதால், கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை ரத்து செய்துள்ளது. அதைத்தொடர்ந்து கேரளா – தமிழகம் இடையிலான அரசு பேருந்துகளின் சேவை வழக்கம் போல் நடைபெற துவங்கியுள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அதேபோல் கேரள அரசு பேருந்துகளும் கன்னியாகுமரி மாவட்டம் வந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!