ரயில் பயணிகள் கவனத்திற்கு – கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்!
நாடு முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ரயில்வே துறையில் பயணிகளுக்கு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளித்து ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடுகளில் தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. அதனால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அத்தகைய பொதுமுடக்கத்தின் காரணமாக அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்களுக்கு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்பட்டது. மேலும் ரயில் பயணிகள் டிக்கெட் பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
அதனை தொடர்ந்து ரயிலில் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வழக்கமாக வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவுகள் பயணிகளுக்கு வழங்க தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து போக்குவரத்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ரயில்வே நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – நிதியமைச்சகம் தகவல்!
அதாவது ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களும் சாதாரண கட்டணத்தில் இயங்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து பயணிகளுக்கு வழங்கப்படும் சமைக்கப்பட்ட உணவுகள் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் விரைவில் ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.