தூய்மை இந்தியா திட்டத்தில் 2 விருதுகளை பெற்ற தமிழகம் – அறிவிப்பு வெளியீடு!
இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டு மக்கள் அனைவரும் என்று பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகம் 2 விருதுகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டம்:
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின், நாட்டின் முன்னேற்றத்திற்கு பல புதிய திட்டங்களை அறிவித்தார். அதில், முக்கிய அம்சமாக தூய்மை இந்தியா திட்டம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திட்டத்தின்படி, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நாட்டின் பிரபலங்கள் பயன்படுத்தப்பட்டனர். இதன் மூலம் திட்டம் மக்களை விரைவில் அடைந்தது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்!
தூய்மை இந்தியா திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து கடந்த மாதத்தில் தூய்மை இந்தியா 2.0 என்ற புதிய வெளியிட்டார். மேலும்,கூடுதலாக நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், அம்ருத் 2.O என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் புது டெல்லியில் விருது வழங்கும் விழாவை நடத்தியது. அதில், 2020 ஜூலை முதல் ஜூன் 2021 வரை இந்திய நகரங்களில் தூய்மை நகரமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை செய்து மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
இந்த பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்ட விருதுகளில் தமிழகத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தின் தூய்மையான நகரங்களில் முதலிடத்தை வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பெற்றுள்ளது. இதற்காக மத்திய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சிறப்பாக செயலாற்றிய சென்னை மாநகராட்சிக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கிடைத்த விருத்தினால் அனைவரும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.