நாளை முதல் செப்டம்பர் 1 வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் அலை குறைந்து வருவதால், மாநிலம் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 1) முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை, ஒரு மாதத்திற்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமல்
நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் பகல் நேரங்களில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மட்டும் அமலில் உள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநில அரசு ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் – 5 முக்கிய மாற்றங்கள்!
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. இருப்பினும், கட்டாக் மற்றும் பூரி மாவட்டங்களிலும், புவனேஸ்வர் நகரத்திலும் வார இறுதிக் கட்டுப்பாடுகள் தொடரும் என அம்மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் ஜெனா அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக ஒடிசாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மாநிலம் முழுவதும் மத இடங்கள், பூங்காக்கள் மற்றும் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதையடுத்து தற்பொழுது வெளிவந்துள்ள புதிய அறிவிப்பின் கீழ் செப்டம்பர் 1 வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,578 புதிய கொரோனா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.