செப்.4 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற செப்டம்பர் 4ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1,501 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 10 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 19.9 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 13,696 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,697 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19.6 லட்சத்தை எட்டியுள்ளது. எனவே ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இளைஞர்கள் தொழில் தொடங்க அரசு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஆந்திரா சுகாதாரம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால் மேலும் பதினைந்து நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 4ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளார். தினசரி இரவு 11 மணிவரை ஊரடங்கு காலை 6 மணி வரை அமலில் இருக்கும். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்கள் இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் திருமணங்கள், விழாக்கள் மற்றும் மத நிகழ்வுகளில் 150 க்கும் மேற்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து சபைகளிலும் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் ஒட்டுமொத்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.