இந்தியாவில் ஒரே நாளில் 18,833 பேருக்கு கொரோனா தொற்று – 278 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கும் தொற்று பயம் மூன்றாம் அலையின் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாதிப்பு நிலவரம் :
இந்தியாவில் கொரோனா அலை வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8850 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,71,881 ஆக அதிகரித்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுகிறது. நேற்று மட்டும் புதிதாக 278 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
இதனால் பலி எண்ணிக்கை 4,49,538 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) விலை மீண்டும் அதிகரிப்பு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மட்டும் 72,51,419 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 91,54,65,826 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 24,770 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.62 ஆக உள்ளது. மேலும் 2,46,687 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.