சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) விலை மீண்டும் அதிகரிப்பு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (LPG) இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் சிலிண்டர் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் விலை:
பெட்ரோல், டீசல் விலையினை ஒவ்வொரு நாளும் எண்ணெய் நிறுவனம் நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால் சிலிண்டர் விலை மாதம் இருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் கேஸ் சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பலரும் வேலையிழந்து வருமானம் இன்றி சிரமப்படும் நிலையில் விலைவாசி உயர்வு பொதுமக்களை மேலும் துயரில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு மீண்டும் 100 ரூபாயை தாண்டியது.
அக்.21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – மாநில அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இந்நிலையில் நடப்பு அக்டோபர் மாதத்திற்கான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ரூ.915 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இல்லத்தரசிகளை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
நவ.1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கொரோனா பரவல் ஊரடங்கு கட்டுப்பாடுகள், வருமான இழப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டில் மட்டும் சிலிண்டர் விலை 300 ரூபாய் உயத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.