மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27% இட ஒதுக்கீடு முறையை இந்தாண்டே அமல்படுத்த எவ்வித தடையும் விதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் என்னும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடும் வழங்க முடிவு செய்யப்பட்டு நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஓபிசி பிரிவில் 1500 மாணவர்களும் முதுகலை படிப்பில் 2500 ஓபிசி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 550 மாணவர்களும், முதுகலையில் 1000 மாணவர்களும் இந்த இட ஒதுக்கீடு மூலம் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஆணையின் மூலம் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பயன் பெறுவார்கள். இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
IPL 2021 – RR vs MI: அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
மனுவில் அரசின் தற்போதைய இடஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டு, பழைய இடஒதுக்கீடு முறையில் நடப்பாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் . இந்நிலையில், திமுக மத்திய அரசின் ஆணையின் படி ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு முறையில் இந்த ஆண்டே அமல்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும், 27% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ள கோரி திமுக மனுவில் தெரிவித்துள்ளது.