இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 26,727 பேருக்கு கொரோனா! 277 பேர் உயிரிழப்பு!

0
இந்தியாவில் எகிறும் கொரோனா - ஒரே நாளில் 26,727 பேருக்கு கொரோனா! 277 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் எகிறும் கொரோனா - ஒரே நாளில் 26,727 பேருக்கு கொரோனா! 277 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 26,727 பேருக்கு கொரோனா! 277 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் இன்று 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையினை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான பாதுகாப்பு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் தற்போது கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,700 க்கு கீழ் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். எனினும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தினை அக்-30 வரை தமிழக அரசு நீட்டித்து ஆணையிட்டுள்ளது. ஆனாலும் நாடு முழுவதும் கணக்கிட்டு பார்க்கையில் மேலும் கொரோனா பெருந்தொற்று பரவிக்கொண்டே தான் இருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் நாளை & அக்.19ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – ஆட்சியர் உத்தரவு!

இந்தியாவில் நேற்று மேலும் 26,727 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.36 கோடியை தாண்டி 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 277 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.48 லட்சத்தை தாண்டி 4,48,339 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 28,246 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 3,30,43,144 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,75,224 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அக்.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு, இரவு ஊரடங்கு நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் இந்தியாவில் இதுவரை 89,02,08,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 64,40,451 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.85% ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.82% ஆக குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதார துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!