தமிழகத்தில் நாளை & அக்.19ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – ஆட்சியர் உத்தரவு!
தமிழகம் முழுவதும் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை அடுத்து சென்னை மாவட்டத்தில் மதுபான கடைகள் நாளை மற்றும் 19 ஆம் தேதி அன்று மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயாராணி உத்தரவிட்டுள்ளார்.
காந்தி ஜெயந்தி:
இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜூன் 15, 2007 இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.
அக்.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு, இரவு ஊரடங்கு நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மதுபான கடைகள் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், நாளை மற்றும் 19 ஆம் தேதி அன்று மூடப்படும் மாவட்ட ஆட்சியர் விஜயாராணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாளை (அக்.2) காந்தி ஜெயந்தி மற்றும் அக்.19 மிலாது நபி என்பதால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும்.
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை – இன்றைய (அக்.1) நிலவரம்!
மேலும் அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறி விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் வழக்கமாக இந்த அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் சில டாஸ்மாக் கடைகளிலும் விற்பனையாளர்கள் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வர். இதனால் இந்த ஆண்டு அதுபோல சூழ்நிலை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
No need to close TASMAC