இந்தியாவில் ஒரே நாளில் 46,148 பேருக்கு கொரோனா தொற்று – 979 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு குறைவாக காணப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கையை போல் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்துள்ளது. இதன் காரணமாக மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 979 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,96,730 ஐ எட்டியுள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 58,578 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,93,09,607 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 5,72,994 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து நாட்டில் இதுவரை மொத்தம் 32.36 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.