இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகம் 12 நாடுகளின் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கொரோனா பரவல் குறையாத காரணத்தால் மேலும் நீட்டித்துள்ளது.
விமான தடை நீட்டிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வகை வைரஸ் கடந்த ஒரு வருட காலமாகவே மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. வளர்ந்த மற்றும் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளிலும் கூட வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்த அறிவுறுத்தியது. அதன் படி நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை கொண்ட முழு ஊரடங்குகளை அறிவித்தது. கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதித்தது.
நாடு முழுவதும் செப்டம்பருக்கு பின் பள்ளிகள் திறப்பு – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!
இதனை தொடர்ந்து விமான சேவைகளை தடை செய்தது. விமான பயணிகள் மூலம் நோய் பரவும் என்ற அச்சம் நிலவியது. இதனால் அனைத்து நாடுகளும் தற்காலிக தடையை அறிவித்தது. தங்கள் நாட்டிலிருந்து மக்கள் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு செய்வதையும் அரசுகள் தடை செய்தது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு விமானங்களுக்கு மட்டும் அனைத்து நாடுகளும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி செல்ல அனுமதித்தது. தற்போது ஒரு சில நாடுகள் கொரோனா தாக்கம் குறைந்த காரணத்தால் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி அளித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், நமிபியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானங்கள் வர தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் இந்தியா உட்பட 12 நாடுகளில் இன்னும் குறையாமல் இருப்பதால் பயணிகள் விமான தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. வழக்கம் போல சரக்கு விமானங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளின்றி அனுமதி அளிக்கப்படுவதாகவும் ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.