ஒரே நாளில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மீண்டும் முழு ஊரடங்கு அமல்! தகவல் வெளியீடு!
அமெரிக்காவில் தற்போது ஒரே நாளில் 5 லட்சத்தை தாண்டி ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதால் பொது மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. அதனால் அந்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு:
உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. இந்த கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் சீனாவை தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படிப்படியாக அடியெடுத்து வைத்த கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் நீட்டித்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை, திறக்க தடை விதிப்பு – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
அடுத்தடுத்து பல்வேறு அலைகளாக தாக்கிய கொரோனா நோய்த்தொற்று நடப்பாண்டு ஜன.10ம் தேதி ஒரே நாளில் 2.93 லட்சம் பேருக்கு பரவி புதிய உச்சம் தொட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு படிப்படியாக குறைய தொடங்கிய கொரோனா பெருந்தொற்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அதாவது 1.98 லட்சம் வரை பாதிப்புகள் பதிவு ஆனது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை 61.9% பேர் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 20.6% பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் தொற்று காரணமாக அமெரிக்காவில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Post Office இல் 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6.94 லட்சம் ரிட்டன்ஸ் – முழு விபரங்கள் இதோ!
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின் படி 29ம் தேதி மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி முதல் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுகளில் 58.6% ஒமைக்ரான் தொற்று என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த வாரம் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.