தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை, திறக்க தடை விதிப்பு – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழக பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலங்களில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆட்சியர் அறிவுறுத்தல்:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையிலும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. பிறகு கடந்த மாதம் 1ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
Post Office இல் 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6.94 லட்சம் ரிட்டன்ஸ் – முழு விபரங்கள் இதோ!
இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து அறிய திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவடைந்த பின் விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் வெகு நாட்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால் மீண்டும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்த்து வந்தனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஜனவரி 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!
இந்த விடுமுறை தினங்களில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் 3ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறை வகுப்புகள் இன்றி முழுமையாக பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடுநிலை வகுப்புகளான 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ம் தேதி முதல் மதிப்பீட்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இத்தேர்வு குறித்த கால அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.