வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவில் பக்தர்களுக்கு தடை – கொரோனா தடுப்பு!
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் பங்கேற்க தடை:
கொரோனா இரண்டாம் பேரலையின் காரணமாக அமலில் ஊழல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தற்போது நோய் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது. இதை கொரோனாவின் 3ம் அலை என பல தரப்பினரும் கூறி வரும் நிலையில் நோய் பரவும் விகிதத்தை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா – 497 உயிரிழப்பு!
வரும் 29ம் தேதி பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது போன்ற விழாக்களின் போது பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது சாத்தியமற்றது என்பதால் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதிகள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு, பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!
நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட கோவை, சேலம், திருப்பூர் போன்ற பகுதிகளில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு மற்றும் வார இறுதியில் கடுமையான ஊரடங்கு என பல விதிமுறைகள் விதித்திருக்கும் நிலையில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நோய் தொற்று பரவும் விகிதத்தை குறைப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.