நாடு முழுவதும் ஓமைக்ரானால் 2022 இல் கொரோனா 3வது அலை? ஷாக் ரிப்போர்ட்! பொதுமக்கள் கவனத்திற்கு!
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக உருமாறிய கொரோனா வகையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா 3வது அலை:
உலகின் பல்வேறு நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலுக்கி வரும் கொரோனா தொற்று முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் உருவானது. இந்த கொரோனா பெருந்தொற்றால் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தின. இருந்தபோதிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வகைகளாக ஆல்பா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல தொற்றுகள் பரவ தொடங்கின.
தமிழகத்தில் நாளை (டிச.20) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய மற்றுமொரு கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று இதுவரை 34க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ளது. அதாவது 100க்கும் அதிகமான நபர்களுக்கு இந்த ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயலின் பிறந்தநாள் கொண்டாட்டம், தனம் கொடுத்த பரிசு – வைரலாகும் ப்ரோமோ!
இந்நிலையில் தேசிய கொரோனா கண்காணிப்பு குழு தலைவரும், ஐதராபாத் இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியருமான வித்யாசாகர் அவர்கள் வரும் 2022 பிப்ரவரி மாதத்தில் இந்த ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கொரோன 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் தற்போது இந்த ஓமைக்ரான் தொற்று பரவலின் தினசரி பாதிப்பு 7,500 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக டெல்டா வைரஸைவிட வேகமாக பரவி வரும் இந்த ஓமைக்ரான் தொற்று கொரோனா 3வது அலையை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்