கொரோனா 3 ஆம் அலை, பள்ளிகளை திறப்பதில் கவனம் தேவை – ICMR விஞ்ஞானி தகவல்!
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும் எனவும், பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவை அவசரமாக மேற்கொள்ள வேண்டாம் எனவும் முன்னாள் ICMR விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்ககேட்கர் தகவல் அளித்துள்ளார்.
கொரோனா அலை
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா 3 ஆம் அலை தொற்றின் தாக்கம் தற்போது உருவாகி இருப்பதாகவும், அவை அடுத்த அக்டோபர் மாதத்தில் உச்சமடையலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா 2 ஆம் அலையை போல 3 ஆம் அலை தாக்கத்தை ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அண்ணா பல்கலை ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – சபாநாயகர் உத்தரவு!
இருப்பினும், கடந்த ஆண்டு ஏற்பட்ட நோய் தொற்றின் தாக்கம் நீண்டகால பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதால் பள்ளிகளைத் திறக்கும் முடிவில் அரசாங்கம் அவசரப்படுத்தக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராமன் கங்ககேட்கர் தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, குறிப்பிட்ட பகுதியில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளைத் திறக்கும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போல முடிவடையும். ஆரம்பத்தில் இது ஒரு தொற்றுநோயாக வந்தது. இப்போது வழக்கமான காய்ச்சலை ஏற்படுத்துகிறது. செரோ சர்வேயின் படி, கொரோனா தடுப்பூசியினால் மூன்றில் இரண்டு பங்கு ஆன்டிபாடிகள் உருவாகிறது. இந்த நோய்த்தொற்றின் அடிப்படை காரணங்களாக, மக்கள் அடர்த்தி, இயக்கம், இடம்பெயர்வு மற்றும் கொரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை மீறுதல் ஆகியவை கணிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், அதன் நேரம், இடங்கள் மற்றும் தீவிரம் மாறுபடும். தடுப்பூசி போடுவது அதிகரிக்கும் போது, நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, கடுமையான நோய் மற்றும் இறப்புகள் போன்றவை குறைவாக இருக்கும். மேலும் கொரோனா வைரஸின் புதிய மறுபாடுகளான இன்ட்ரஸ்ட், லம்ப்டா, Mu மற்றும் C.1.2 ஆகியவை வேகமாக உருமாறுவதாக தோன்றுகிறது.
இந்த வகையில் கொரோனா 3 ஆவது அலை உருவானால், முதல் மற்றும் இரண்டாவது அலை குறைவாக இருந்த பகுதிகள், தடுப்பூசி போடாதவர்கள், வயதான நபர்களை அதிகம் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனுடன் கொரோனா நோய்த்தொற்று உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் என்பதால் நீரிழிவு, உடல் பருமன், ஞாபக மறதி, தூக்கமின்மை மற்றும் இது போன்ற பல பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களை அதிகம் தாக்கக்கூடும். இந்த சூழலில் நாடு முழுவதும் பள்ளிகளை திறப்பதற்கு ஒரு பரவலாக்கப்பட்ட அணுகுமுறை இருக்க வேண்டும்.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அறிவுறுத்தல்!
கடந்த இரண்டு வாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய தொற்றுநோய் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பதற்கான முடிவை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க வேண்டும். மேலும் இந்தியாவில் குழந்தைகளின் ஆரோக்கியம் ஒரு முக்கியமான பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியும் முக்கியம். ஆனால் இரண்டிற்குமான சமநிலையான அணுகுமுறை சிறந்தது என கூறிய அவர், பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.