தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தை ஒப்பிட்டு பார்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு ஆசிரியர்கள்:
தமிழக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அதிக நேரம் பணிபுரிந்தும் குறைவான ஊதியம் பெறுகின்றனர். கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் சில பள்ளிகளில் மாணவர்களின் கல்வி கட்டணம் இன்றி ஆசிரியர்களுக்கு ஊதியம் தர இயலாத நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளனர்.
தமிழகத்தில் செப்.14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையிலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் தங்களுக்கு அரசு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்படி பொருளாதார நெருக்கடி நிலையிலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை – முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!
இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் கணேசன் முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூபாய் 23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நாட்டின் முன்னேற்றம் ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் 7,000 & 8,000 ரூபாய் என்று சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ரூ.1.25 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்று பார்த்தால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள், அதே போல அரசு பள்ளி ஆசிரியர்களும் போட்டி போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.