அண்ணா பல்கலை ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – சபாநாயகர் உத்தரவு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அண்ணா பல்கலை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு நடிகரும் கூட. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் அவர் நடித்தாலும் அனைத்தும் வெற்றி படங்களாக மாறியது. இந்நிலையில் அவர் எம்.எல்.ஏ.,வாக பதவி ஏற்றதும் அவருக்கு பெரிய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அறிவுறுத்தல்!
இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று பல்வேறு நலத்திட்டங்கள் பற்றியும் சலுகைகள் பற்றியும் முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மேலும் அரசு துறைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 ஆக உயர்த்தப்படும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செப்.14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வனும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.