இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைப்பு? மத்திய அரசு விளக்கம்!
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலையை ஒரே மாதிரியான அளவில் ரூ.15 வரை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
விலை குறைப்பு
பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்காக பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று சமையல் எண்ணெய். இந்த எண்ணெய்களின் விலையானது கடந்த ஒரு சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய நிதியமைச்சகத்தின் GST கவுன்சில் கூட்டத்தில் பேனா மை துவக்கி அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கான GST வரி உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்த பொருட்களின் மீதான விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் சமையல் எண்ணெய் விலையையும் உயர்த்துவதற்கு இந்த கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சமையல் எண்ணெய்களின் விலையை ரூ.15 வரை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, சர்வதேச அளவில் சமையல் எண்ணெய்களின் விலை தொடர்ச்சியாக குறைந்து வரும் சூழலில், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையை ரூ.15 வரை குறைக்க வேண்டும் என்றும், இதை இந்த வாரத்திற்குள் செய்ய வேண்டும் என்றும் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – எச்சரிக்கை விடுத்துள்ள ஐநா!
மேலும், ஒரே பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணெயை நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது, சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திடீர் விலை குறைப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.