தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் விடுமுறை:
தமிழகத்தில் அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை தினங்களான அன்று அனைத்து கல்வி நிலையங்களுக்கும் பொதுவாக விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை!
இந்நிலையில், இந்த நாட்கள் வியாழன் மற்றும் வெள்ளி கிழமையாக உள்ளது. தற்போதைய நிலையில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதனால் அடுத்து வரும் சனி கிழமை மட்டுமே வேலை நாளாக உள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி பணியாற்றும் ஆசிரியர்கள் சிரமப்பட நேரிடும் என்றும் சனிக்கிழமையையும் விடுமுறை தினமாக அறிவிக்க ஆசிரியர் சங்கம் அரசிற்கு கோரிக்கை வைத்தது.
அமேசான் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விபரங்கள் இதோ!
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அக்டோபர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “வருகின்ற 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், வார இறுதி நாளான 16 .10 .2021 அன்று பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் (பாலிடெக்னிக்) விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.