தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பால் விலை? அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் உள்ள அமுல் தனியார் பால் நிறுவனம் பாலின் விலையை உயர்த்தி உள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
பால் விலை:
இந்தியாவில் தற்போது உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் பரவி வந்த கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் பின்தங்கி காணப்பட்டது. இதன் காரணமாக மக்களிடையே வறுமை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது பழைய நிலையில் இருந்து மக்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது உணவு பொருட்களின் மீது மத்திய அரசால் விதிக்கப்படும் வரியால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களின் அன்றாட தேவைகளில் முக்கியமான உணவு பொருளான பாலின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தேநீர் கடைகள் மற்றும் வணிகம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் தனியார் பாலையே சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி தன்னிச்சையாக பால் விலையை உயர்த்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டது. தற்போது பாலின் விலை அதிகரித்து வருவது மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆக.20 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீனிவாச தனியார் பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ. 2 வரை உயர்த்தியது. இதனை தொடர்ந்து ஹட்சன் நிறுவனமும் பால், மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் பால் நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளது. மேலும் பால் சார்ந்த பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து சாமானிய மக்கள் மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்.