இந்தியாவில் வேலையில்லாமல் தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் – ஷாக் தகவல்!
இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த வேலையில்லா திண்டாட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. நாட்டில் பல புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டது. ஆனாலும் இன்னும் பலர் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அதிலும் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் பல ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வேலை தேடி வந்த நிலையில் ஏற்கனவே பணியில் இருந்தவர்களே வேலையிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய அரசு முதல் மாநில அரசுகள் வரை மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் பல திட்டங்களை செய்லபடுத்தி தான் வருகிறது. அப்படி இருந்தும் இந்தியாவில் வேலையில்லா நிலை தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் தான் மத்திய, மாநில அரசு துறைகளுக்கான தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் அண்மையில் SSC, UPSC போன்ற போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
SBI வங்கியின் தலைமையகதிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பதறவைக்கும் போன் கால் – போலீசார் விசாரணை!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து அடுத்தாக தேர்வுகள் குறித்த அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் வேலையின்மை குறித்து பேசிய எம்பி ராகுல் காந்தி, இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் உள்ளது. ஒரு ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். ஆனால் தற்போது கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனரே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்