SBI வங்கியின் தலைமையகதிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பதறவைக்கும் போன் கால் – போலீசார் விசாரணை!
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை தலைமையகதிற்கு கடந்த இரண்டு நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டல் குறித்து காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை மிரட்டல்:
மும்பையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் தலைமையகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது. அங்குள்ள அலுவலக SBI லைனில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் தான் பாகிஸ்தானில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும் அந்த அழைப்பில் பேசிய நபர் எஸ்பிஐ தலைவரை கடத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கட்டிடத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த அழைப்பு அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கொலை மிரட்டல் குறித்து மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது. அந்த அழைப்பை மேற்கொண்ட நபர் யார் என்று கண்டறியும் பணியை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்த நபர் உண்மையிலேயே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரா? இல்லையா? என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஏற்கனவே இது போல மும்பை காவல்துறைக்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. அந்த அழைப்பில் பேசிய நபர் மும்பையில் இதற்கு முன்பு கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியது போல மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டியுள்ளார். அதனை தொடர்ந்து அதே மும்பை நகரத்தில் இப்போது வங்கி அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்