தமிழகத்தில் வணிக வரித்துறை தொடர்பான புகார்கள் – புதிய பிரிவு துவக்கம்!
தமிழக அரசு சார்பில் வணிக வரித்துறைத் துறையில், பொதுமக்கள் அல்லது வணிகர்கள் புகார் அளிக்கும் வகையில் அனைத்து வேலைநாட்களிலும் செயல்படும் புதிய புகார் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
புகார் பிரிவு:
தமிழகத்தில் வணிக வரித்துறை குறித்து பல புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக வணிக வரித்துறை அலுவலர்கள் சரியான நேரத்தில் அலுவலகம் வரவில்லை எனவும், பல வணிக வரி வசூல் செய்யாமல் நிலுவையில் உள்ளதாகவும், மக்களுக்கு கால தாமதமாக பதிவுப்பணிகள் நடைபெறுகிறது போன்ற புகார்கள் எழுந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணி – அரசுக்கு கோரிக்கை!
இதனை சரி செய்யும் நோக்கில் வணிக வரித்துறையில், சேவை குறைபாடு குறித்து பொதுமக்கள் அல்லது வணிகர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்ய கடந்த 1 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள வணிக வரித்துறை கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த புகார் பிரிவானது அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வணிக வரித்துறை சார்பில் புகார்கள் இருப்பின் நேரடியாகவோ அல்லது 044-2851 4250 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம் அல்லது புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.