தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணி – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடங்களை துவங்கி, ஆசிரியர்களை நியமித்து 65,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணினி அறிவியல் பாடம்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் 65,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், கணினி அறிவியலுக்கென ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 43,733 பேருக்கு கொரோனா – 930 பேர் உயிரிழப்பு!
இந்த வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடங்களை ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், கணினி அறிவியல் என்ற பாடம் நடைமுறையில் இல்லை. அப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை சேர்த்து, அந்த வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு ஏற்றவாறு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அதாவது தற்போதுள்ள காலகட்டத்தில் கணினி பயன்பாடு என்பது மிக முக்கியமானதாக கருதப்படுவதால், அரசு பள்ளிகளில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளில் கணினி ஆய்வகங்களை உருவாக்கி, ஒரு பள்ளிக்கு கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் படித்த ஒரு ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும். மேலும் கணினி அறிவியல் பாடத்தை ஒரு தனி முதன்மையான பாடமாக உருவாக்க வேண்டும். தவிர கணினி அறிவியல் பாடத்துக்கென ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது, 10+2+3+1 என்ற பணி நியமன விதியை உருவாக்கி தர வேண்டும்.
மேலும் கணினி அறிவியல் பாடங்களில் TET, TRB மற்றும் DEO தேர்வு எழுதுவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. NCTE ன் விதிப்படி, எந்தவொரு படத்திலும் பி.எட் முடித்தவர்கள் TET தேர்வுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால் தமிழகத்தை பொருத்தளவில், TNTET, AEEO, DEO, TRB போன்ற ஆசிரியர் தேர்வுகளில் கணினி அறிவியல் பாடங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே கணினி படித்தவர்களுக்கு இந்த தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பி.எட் படித்தவர்கள் பலர் 40 வயதை கடந்தவர்களாக இருப்பதால் 50 சதவீதம் சீனியாரிட்டி மற்றும் தேர்வு முறையை பின்பற்ற அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.