நாடு முழுவதும் ஒரே நாளில் 43,733 பேருக்கு கொரோனா – 930 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 43,733 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 930 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பல மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு – 2022 முதல் துவக்கம்!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 43,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,06,63,665 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 930 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,04,211 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஒரே நாளில் 47,240 பேர் குணமடைந்துள்ளனர்.
செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு 2021 – என்டிஏ அறிவிப்பு!
இதனால் மொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97,99,534 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 4,59,920 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 36,13,23,548 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.