அக்.11 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!
இந்தியாவின் அண்டை மாநிலமான பாகிஸ்தானில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்று சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (NCOC) நடத்திய அதிகாரப்பூர்வ கொரோனா எதிர்ப்பு குறித்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்நாடு முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகளில் வட்டி விகிதம்!
அதன் அடிப்படையில் வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் திட்டமிடல் அமைச்சர் அசாத் உமர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக அந்நாட்டில் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்ட உடனேயே கடந்த ஜூலை மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் பலத்த கட்டுப்பாடுகளுடன் மாற்று நாட்களில் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 ஊக்கத்தொகை – யார் யார் பெறலாம்? முழு விபரங்கள் இதோ!
இதற்கிடையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,453 புதிய கொரோனா வழக்குகளுடன் 46 இறப்புகளும் பதிவாகியுள்ளன. தவிர பாகிஸ்தானில் இதுவரை 3.16 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 6.20 கோடிக்கும் அதிகமானோர் ஒரு டோஸ் அளவு தடுப்பூசிகளை எடுத்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 7 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.