தமிழகத்தில் கல்லூரிகள் ஜூலை 18 ஆம் தேதி திறப்பு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் கோடை விடுமுறை முடிந்து 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூலை 18 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், கடந்த கல்வியாண்டில் காலம் தாழ்த்தி தான் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு மே மாதத்தில் தான் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. அதாவது, மே மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் முழுக்கவே கலை, மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்த பிறகு கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரைக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
இதனிடையே, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியாகி மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூலை 18 ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்!
இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யும்படி கல்லூரியின் முதல்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளில் முன்கூட்டியே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் காரணத்தினால் கட்டாயமாக மாணவர்கள் மாஸ்க் அணிந்து தான் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.