கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் ஆகஸ்ட் முதல் திறப்பு? ராஜஸ்தான் முதல்வர் ஆலோசனை!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை சரிவால் கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவல் பதிப்பானது குறைந்து வரும் பட்சத்தில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து மாநில முதல்வர் அசோக் கெலாட் ஆலோசித்து வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் – அரசுக்கு வலியுறுத்தல்!
அதன் படி ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டால், கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அவை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தானில் பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கையின் பேரில், குழந்தைகளின் எதிர்காலமும் வருங்கால வாழ்க்கையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது கட்டாயமாகும் என்று அமைச்சர் சாந்தி தரிவால் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும், மருத்துவர்கள், பொறியாளர் உட்பட்ட பணிகளுக்காக பயிற்சி பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், பயிற்சி நிறுவனங்களையும் திறப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு கல்வி நிறுவனங்களை மீண்டுமாக துவங்கலாம் எனவும் ஆலோசனை கொடுத்துள்ளார். இந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்ட முதல்வர் அசோக் கெலாட் இது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன் படி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.