தமிழகத்தில் TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் – அரசுக்கு வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் – அரசுக்கு வலியுறுத்தல்!

இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்த சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசு இதற்கான ஆணையை வெளியிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்:

இந்தியாவில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் அரசு பணிக்கு செல்ல மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி ஆணை வழங்கப்படும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. இதனால் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் சான்றிதழ் காலாவதி ஆனதால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளனர். எனவே இம்முறையை மாற்றி அமைக்கும் படி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு – ஜூலை 16 மின்தடை பகுதிகள்!

இதனை ஏற்று மத்திய அரசு ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று அறிவித்தது. 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் கூறியது. மேலும் டெட் சான்றிதழ் காலாவதியானவர்களுக்கு புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் படி முதலில் மத்திய கல்வி வாரியமான (CBSE) நடத்தும் CTET தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளியிட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை தமிழக அரசாணை பிறப்பிக்கவில்லை. எனவே உடனடியாக தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் பணிகளில் சேர அரசு உதவ வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!