‘1,00,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு’ – Cognizant நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், நடப்பாண்டில் ஆயிரக்கணக்கில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வரிசையில் காக்னிசண்ட் (Cognizant) நிறுவனமும் இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்க உள்ளது.
ஐடி வேலைவாய்ப்பு:
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் துவங்கிய போது மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய ஊக்குவித்தது. ஊரடங்கு நிலை தளர்த்தபட்ட போதும் இந்த பணியானது தொடர்ந்து வருகிறது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செலவு குறைந்து, வருமானம் பெருகியது.
தமிழக தனியார் பள்ளிகளில் 85% கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் தங்களது தரவுகளை டிஜிட்டல் முறையில் மாற்றி வருகின்றனர். இதனால் IT நிறுவனங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் IT நிறுவனங்கள் புதிய பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களை நடப்பு நிதியாண்டில் பணியமர்த்தப் போவதாக தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் காக்னிசண்ட் (Cognizant) நிறுவனமும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக கூறியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரயன் ஹம்ப்ரீஸ் கூறுகையில், 2021ஆம் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் 2021 ஆம் ஆண்டிலேயே 30,000 ஃப்ரஷர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க காக்னிசண்ட் திட்டமிட்டுள்ளது. இதனால் ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.
Very good
Good