தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தேங்காய் எண்ணெய் விநியோகம்! முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யுமாறு விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் விவசாயிகள் வாழ்வு செழிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்:
நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் நியாயவிலையில் பொருட்கள் வழங்கும் விதமாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய ரேஷன் பொருட்களை அனைவருக்கும் வழங்கும் விதமாக வாரத்தின் 6 நாட்கள் கடைகள் திறக்குமாறு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு? ஆலோசனையில் வெளியான முக்கிய தகவல்!
இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் வெளிநாட்டு பொருட்களுக்கு கொடுக்கும் சலுகையை உள்ளூர் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு அரசு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதாவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் – ரசிகர்கள் வருத்தம்!
ஆனால் உள்ளூரில் விவசாயம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்ற கடலெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவைகளை அரசு சலுகை வழங்குவதில்லை. அதனால் அரசு அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் இவற்றை விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் இத்தகைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விவசாயிகள் வாழ்வு செழிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.