தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு? ஆலோசனையில் வெளியான முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு? ஆலோசனையில் வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு? ஆலோசனையில் வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு? ஆலோசனையில் வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் மற்ற கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் பாதிப்புகள் 300க்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் தோறும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட சில நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 30க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்துள்ள ஒமிக்ரான் வைரஸை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக தலைமை செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உட்பட சில மருத்துவ துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.23) ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 10 பொருட்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு விதிப்பதால் எவ்வித பயனும் இல்லை என்ற நோக்கத்துடன் அரசு இந்த ஊரடங்கை விதிக்க வாய்ப்புகள் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. என்றாலும் பொது இடங்களில் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிவதை வலியுறுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர்களின் உதவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டு தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தவும், அதை கண்காணிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசனை செய்யப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து ஒமிக்ரானின் பரவல் தொற்று வேகமாக இருந்து வரும் சூழலில் அதன் இறப்பு விகிதம் குறைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் – ரசிகர்கள் வருத்தம்!

இருந்தாலும் மருத்துவமனைகளில் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒமிக்ரான் பரவலின் பாதிப்பு 10% தாண்டும் பட்சத்தில் அப்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு அல்லது பகல் நேர ஊரடங்கு விதிக்கப்படுமா என்பது குறித்து அரசு வரும் நாட்களில் ஆலோசனை மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!