தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவுகளுக்கான வலுவூட்டல் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜன.10ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடர அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் கற்றலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவு சார்ந்தும், அவற்றை மாணவர்களுக்கு அடையச் செய்வது சார்ந்தும் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதாவது இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாவட்ட வாரியாக இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் வகுப்பறை உற்றுநோக்கலை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!

அவ்வாறு வகுப்பறை உற்றுநோக்கல் சார்ந்து பெற்ற விபரங்களை ஆய்வு செய்த போது மாணவர்களுக்கு கற்றல் அடைவுகளை அடைய செய்வதற்கான ஆசிரியர்களின் முயற்சிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்களுக்கான பாடவாரியான மாநில பாடத்திட்டத்திற்கு கற்றல் அடைவுகள் மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதனை மாணவர்களை அடைய செய்வதற்கான பயிற்சி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இருப்பினும் இது சார்ந்த சந்தேகங்களை ஆசிரியர்களுக்கு தீர்க்கும் விதமாக ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் அடைவுகள் குறித்து புரிதலை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் அனைத்து பள்ளிகளிலும் பாடவாரியாக 1 முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி இணைய வாயிலாக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி மாவட்ட தலைமையிடத்தில் உயர்நிலைப்பள்ளி, உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற உள்ளது. இதில் பயிற்சி பெறும் கருத்தாளர்கள் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கு வரும் ஜன.10ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!