தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 10, 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவல் மூன்றாம் அலை எனவும், டெல்டாவை போல வேகமாக பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 121 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் காலை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்று கிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் நலன் கருதி 1 – 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு – ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு!
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி விட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் மாணவர்களை பள்ளி அனுப்புவதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.