தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில கூடிய மாணவர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்த கூடிய உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகளை எழுதுவதில் சற்று சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதனால் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வு:
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் மற்றும் மத்திய கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே கல்லூரிகளில் பயில முடியும். அதே போல சில மாநில அரசுகளும் உயர்கல்விக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தகைய தேர்வுகளில் அரசு பள்ளிகளில் பயில கூடிய மாணவர்கள் தேர்ச்சி பெறும் விகிதம் குறைவாகவே இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில கூடிய மாணவர்களுக்கு பள்ளியிலேயே போட்டித்தேர்வுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பில் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு நவம்பர் மூன்றாம் வாரத்திலிருந்து பயிற்சி தொடங்கப்படும்.
எச்சரிக்கை! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை விடாது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Follow our Instagram for more Latest Updates
இந்த போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிக்கு மாணவர்கள் தங்களின் முந்தைய வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாவட்டத்திலும் 412 பயிற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு 11 வகுப்பில் இருந்து 20 மாணவர்களும், 12ம் வகுப்பில் 50 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.