எச்சரிக்கை! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை விடாது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நவ.9ம் தேதி வரை கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் நாளை (நவ.06) தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Exams Daily Mobile App Download
அடுத்தாக நவ.7,8,9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிஒிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
Follow our Instagram for more Latest Updates
நவ. 8ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலின் வட மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதே போல நவ.9 அன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதனால் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் நவ.9ம் தேதி இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.